Thursday, December 1, 2011

என்னவனை காட்டி விடு.

தூங்கும் முன்
இரு கரம் ஏந்தி
இமைகளை மூடி
இறைவனிடம் பிரார்த்தனை
கனவிலாவது
என்னவனை காட்டி விடு...

என் இரவுகள் .............

என் இரவுகள்
என்னை தின்னும் வரை
நான் கொண்ட காதலை
நானே அறிந்திருக்கவில்லை.....!!!

உன் நினைவுகள்.............

விழிக்க மறந்த
என் கனவுகளில்........
அழிக்க மறந்த
உன் நினைவுகள்

உன் காதல் .............!!!

உன் காதல் நாடகத்தில்
நீ கிறுக்கி கிழிக்க அகப்பட்ட
வெள்ளைத்தாள் என் உயிரோ.

காதல் பரிசு.............

உன்னையே உலகம் என்று
எண்ணிய எனக்கு..!
நீ கொடுத்த காதல் பரிசு
உன்னை மறக்க முடியாமல்
நான் படும் அவஸ்தைகள்
மட்டுமே..