Wednesday, November 30, 2011

காத்திருப்பது காதலா...........

கனவுகளில் ஏங்கி
கண்களில் நீராகி
இதயத்தில் சருகாகி
நெஞ்சத்திற்குள் வலியாகி
நேசத்திற்காய்
காத்திருப்பதுதான் காதலா..

Tuesday, November 29, 2011

கனவு கண்டேன்...................

கனவு கண்டேன்..
கண்ணில் கண்ட காட்சிகள்
கனவில் வந்தன....
கனவில் வந்தவனே
கனவோடு செல்லாமல்
கண்ணாளனாய் நீ வேண்டும்....
கண்ணோடு கண் பேசின..
காந்த கண் பார்வை
கள்ளம் அற்ற உன் பேச்சு...
கலங்கி போனது என் உள்ளம்....
காலம் எல்லாம் வேண்டும் நீ...
காலம் நம்மை சேர்குமோ என்றேன்....
கலங்கிய கண்ணோடு மௌனமானாய்
கனவு தான் என்றாலும்..
கால் நூற்றாண்டு வாழந்த திருப்தி என்னுள்...
கனவு நாயகனே...
கனவில் இருந்து செல்லாதே...
கண் உறக்கம் கலைய விருப்பம் இல்லை..
கண் உறக்கம் விழித்தால்
கலைந்து போவாய்......நீ
கண் விழிக்காத உறக்கம் வேண்டும்..
கனவோடு வாழ்ந்தாலும்.. போதும்
கண்ணாளனே...

Monday, November 28, 2011

உன்னை மறந்து போக நினைத்து
மறந்து போனேன் உன்னை அல்ல என்னை ..

Sunday, November 27, 2011

நீ விட்டுப்போன நினைவுகளோடு..................

நீ விட்டுப்போன நினைவுகளோடு...
உனக்காக காத்திருப்பேன் மறு ஜென்மமும்
ஆனால் நீ நானாக நான் நீயாக..
அப்போதாவது உனக்கு புரியும்,
காத்திருத்தல் எவ்வளவு கடினம் என்று.....!!..

Saturday, November 26, 2011

தூக்கதிலாவது
உன்னை மறக்கலாமென
நினைத்து
கண்மூடி தூங்கி
தூங்குவதாய் நினைக்க மட்டுமே
முடிந்த என்னால்




உன்னை மறக்க ஏனோ முடியவில்லை
தோற்று கொண்டிருக்கிறேன் தினமும்...
நினைவே உனக்கு மறதி
வரும் காலம் எப்போது....

Friday, November 25, 2011

விழிகளும் சுமை தான்............




விழிகளும் சுமை தான்
மனதிற்கு பிடித்தவர்களை
காண முடியாத போது
...........

Thursday, November 24, 2011

காதல்…!

உன்மீது நானும்.. என்மீது நீயும்.. வைத்து இருக்கும்
காதலை பார்த்து..
பொறாமையில் மனம் உடைந்திருக்குமோ காதல்…!

உன் முகம்.....!!!



ஊரெல்லாம் உறங்கிப்
போய்க் கிடக்கிறது
தூங்காமல் என் மனம்
தூங்க விடாமல் உன் முகம்....!!!

என் அன்பு உண்மையானது....

நான் நேசித்தவர்களெல்லாம்
என்னை ஏமாற்றி சென்றாலும்.
என்னை ஏமாற்றியவர்களைக்கூட
நான் நேசித்து செல்வேன்.
என் அன்பு உண்மையானது.....

Wednesday, November 23, 2011

உனக்குள் மட்டும்....!


பத்திரமாய் பார்த்துக் கொள்
என் மனசை
அது உயிர்த்திருக்க வேண்டும்
பல நூற்றாண்டு
அதுவும்
உனக்குள் மட்டும்....!

காதல் தோல்வி.....



என் காதல் தோல்வி என்பது
நீ என்னை பிரிவது அல்ல
நான் உன்னை
மறப்பது தான்......

புரிந்து கொண்டால் .....!!!

"மரணம் கூட நம்மை விட்டு பிரிந்து விடும் .........
மனசுக்கு பிடித்தவர்கள் நம்மை புரிந்து கொண்டால் .....

முகவரி எழுத.................

ஒருவரி மடலில்
உயிரை வரைந்தேன்
இருவிழி நிழலில்
உதிரம் சுமந்தேன் .
இருந்தும் ...
முகவரி எழுத
மூச்சு இல்லையே....!

என் விழி ஓரம் ..!!


நீ இருப்பதோ வெகு தூரம் ...
உன் நினைவுகளோ ..
என் விழி ஓரம் ..!!

தொலைந்தே வாழ்கிறோம் ..

தொடு தூரத்தில் இருந்தாலும்
தொலைதூரத்தில் இருந்தாலும்
எப்போதும் நீ எனக்குள்ளும் நான்
உனக்குள்ளும் தொலைந்தே
வாழ்கிறோம் ..

நினைவுகள் கூட பேசும்"...

உண்மையான
நேசம்
இருந்தால்...
வார்த்தைகள் தேவை இல்லை
நினைவுகள்
கூட பேசும்"...............

Sunday, November 13, 2011

உன் மெளனம் ..........

உன் மெளனம் பார்த்து பார்த்தே
ஊமையாகிய போன என்னிடம் வந்து
கேக்கிறாய்
ஏன் இந்த மெளனம் என்று??

உன்னை..............


உன்னை பார்த்துக்கொண்டேயிருக்கும்
அற்புத நிமிடங்களில்,
அனைத்தும் மறந்து
ஊமையாகிவிடுகிறது என்
உலகம் ......!

கார் மேகங்களுக்குள்...........

கார் மேகங்களுக்குள்
மறைந்திருக்கும்
மழைத் துளிகளைப் போலவே தான்
என் புன்னகைக்குள்
ஒளிந்திருக்கின்றன
என் கண்ணீர் துளிகளும்....!

இரவை..............


இரவை பகலும், 
பகலை இரவும் தேடிக் கொண்டிருக்கின்றன. 

இரவுக்கும் பகலுக்கும் இடையே ...
உன்னுள் தொலைந்த என்னை.
தேடிக்கொண்டிருக்கிறேன் நான்.....!
  

வாழ்க்கையில் ..........

வாழ்க்கையில் சிலரை மறக்க முடியாது.
சிலரை பிரிய முடியாது.
மறக்காமல் நீயிரு.
பிரியாமல் நானிருக்கிறேன்...

அதிகாலை...........

அதிகாலை சூரியன்
அந்திமாலை நிலவு
இரவுநேர நட்சத்திரம்
இப்படி நிஜங்கள் மறைந்து போனாலும்...
நீ தந்து சென்ற நினைவுகள் என்றும் மறையாது...

கண்கள்.............

கண்கள் அழவில்லை
உதடுகள் சொல்லவில்லை
இதயம் மட்டும் வலிக்கிறது
உன்னை காணாமல்.

உன்னை மறந்து.................

உன்னை மறந்து
என்னால் உறங்க
முடியவில்லை

உன் இமைகளாவது
சேர்ந்திருந்தால்
இரவல் கொடு

கனவில் நன்றி
சொல்வேன்.....!!!

எத்தனை யுகங்கள் கடந்தாலும்....


எத்தனை யுகங்கள் கடந்தாலும்
காத்திருப்பேன் ஏன் தெரியுமா?
உன்னை விட,
உன் நினைவுகள்
இதமானவை என்றும் நிஜமானவை...

உயிரே!.........


உயிரே!
உனக்காய்..
நான் வரைந்தவரிகளில் எல்லாம்...
காதலே மிஞ்சும்...!
அவ்வரிகளுக்கு உன் கண்களே தஞ்சம்.